ஆஸியில் விஷக் காளானை உணவாக வழங்கிய பெண்ணுக்கு 3 ஆயுள் தண்டனை

Must Read

அவுஸ்திரேலியாவில் விஷக் காளான்களை உணவாக வழங்கிய பெண் ஒருவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிக விஷமிகுந்த “டெத் கேப்” காளான்களை உணவுடன் கலந்து மூன்று பேரைக் கொன்ற ஆஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு (50), மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகே பரோல் கோரலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2023 ஜூலை 31 ஆம் திகதி, எரின் தனது முன்னாள் கணவன் சைமன் பேட்டர்சனின் பெற்றோர் டான், கேயில் மற்றும் உறவினர் ஹெதர் வில்கின்சன் ஆகியோருக்கு தனது வீட்டில் “பீஃப் வெல்லிங்டன்” எனும் உணவை பரிமாறினார்.

அதில் அவர் நோக்கமுடன் டெத் கேப் காளான்களை கலந்து வைத்திருந்தது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

உணவு உட்கொண்டவர்கள் கடுமையான உடல் நலக்கேடு காரணமாக சில நாட்களில் உயிரிழந்தனர்.

மற்றொரு விருந்தினர், பாஸ்டர் இயான் வில்கின்சன் உயிர் தப்பியிருந்தாலும், அவரது மனைவி ஹெதர் உயிரிழந்தார்.

இவரின் உயிர்தப்பலுக்கான முயற்சியில் எரினுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை தனியாக விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கிரிஸ்டோபர் பீல், “இந்தக் குற்றம் முழுமையான திட்டமிடலுடன் செய்யப்பட்டது. நீங்கள் நம்பிக்கையை துரோகம் செய்துள்ளீர்கள். உங்கள் சொந்த பிள்ளைகளுக்கே பாட்டி, தாத்தா போன்ற அன்புக்குரியவர்களை இழக்கும் துயரம் உண்டாக்கியுள்ளீர்கள்” என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.

எரின், விசாரணையின் போது பல முறை பொய்களை கூறியதாகவும், காளான்களை சந்தையில் வாங்கியதாகக் கூறி அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாகவும் அரச தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் அவர் பயன்படுத்திய காளான் உலர்த்தும் கருவியை (dehydrator) மறைத்து அழித்ததும் வெளிச்சம் கண்டது.

உலகின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில், மெல்போர்ன் உச்ச நீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பாக நடைபெற்றது. வழக்கு தொடர்பாக பல பாட்காஸ்ட், ஆவணப்படங்களும் வெளியானதால் அவுஸ்திரேலியாவே பரபரப்படைந்தது.

உயிர்தப்பிய பாஸ்டர் இயான் வில்கின்சன் நீதிமன்றத்துக்கு வெளியே பேசியபோது, விசாரணை அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “நான் இனி எரின் பேட்டர்சனின் பலியாடல்ல; அவர் என் கருணையின் பலியாடாகிவிட்டார்” என்று மன்னிப்பையும் வழங்கியிருந்தார்.

எரின் பேட்டர்சன் தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அக்டோபர் 6 நள்ளிரவு வரை கால அவகாசம் பெற்றுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.