அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அரசியல் பிரபலங்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர், அந்த வகையில் மற்றுமொரு அரசியல் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ மாநகரசபையின் மேயர் சமன்லால் பொ்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சமன்லால் பெர்னாண்டோவை கைது செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ மாநகரசபையின் வீதி அபிவிருத்தி திட்டங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக சமன்லால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமன்லால் பொ்னாண்டோ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

