தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிவிக்கவில்லை – கத்தார்

Must Read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், கத்தாரில் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவினர்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு முன்னதாக கத்தார் அதிகாரிகளுக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் கத்தார் இதை கடுமையாக மறுத்துள்ளது.

டோஹாவின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை வெளியிட்டது.

அமெரிக்க ஆதரவில் நடக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் கத்தார் முக்கியமான நடுவராக செயல்பட்டு வந்தது.

“அமெரிக்க ராணுவம், டோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை டிரம்ப் நிர்வாகத்துக்கு அறிவித்தது. கத்தார் போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் எங்கள் இலக்குகளை முன்னேற்றாது. ஆனால் ஹமாஸை அழிப்பது நியாயமான இலக்கு” என வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலைன் லெவிட் கூறியுள்ளார்.

டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மூலம் கத்தாரைத் தகவலறியச் செய்ததாகவும் லெவிட் தெரிவித்தார்.

ஆனால் கத்தார் வெளிநாட்டு அமைச்சகம் அதனை மறுத்து, “இஸ்ரேல் தாக்குதல் நடந்தபோது வெடிப்பு சத்தத்திற்கிடையில் தான் அமெரிக்க அதிகாரியின் அழைப்பு வந்தது” என மஜித் அல்-அன்சாரி வலியுறுத்தினார்.

கத்தார் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்காவின் அழைப்பு தாக்குதல் தொடங்கி பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வந்ததாகக் குறிப்பிட்டு, இந்த சம்பவத்தை “அரச பயங்கரவாதம்” என விவரித்தார்.

ஹமாஸ், தாக்குதலில் தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும், முக்கிய பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கத்தாரி பாதுகாப்பு அதிகாரி என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

டிரம்ப் பின்னர், “இந்தத் தாக்குதல் நடந்த இடம் குறித்து மிகுந்த வருத்தம்” தெரிவித்ததாகவும், இது மீண்டும் நடைபெறாது என கத்தாருக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் முடிவால் தான் இந்த தாக்குதல் நடந்தது, தனது முடிவால் அல்ல எனவும் டிரம்ப் தனது “ட்ருத் சோஷியல்” தளத்தில் விளக்கமளித்தார்.

ஹமாஸ், “இந்தத் தாக்குதல், நேதன்யாகு அரசாங்கம் எந்த உடன்பாட்டையும் விரும்பவில்லை என்பதற்கான வெளிப்படையான சான்று” எனக் கூறி, அமெரிக்காவையும் இஸ்ரேலுடன் இணைந்து பொறுப்பேற்க வேண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை” என மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி கண்டித்தார்.

மேலும், கத்தார் தனது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும், ஆனால் தற்போதைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பங்கை விலக்கிக்கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நம்பகத்தன்மையை மத்திய கிழக்கில் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.