இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாயமாகியுள்ள புதிய “இ-வருகை அட்டை”

Must Read

இந்திய குடிவரவு திணைக்களம் (Bureau of Immigration) வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய இ-வருகை அட்டை (E-Arrival Card) முறைமையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த முறை, இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட காகித அடிப்படையிலான படிவங்களை முழுமையாக மாற்றியுள்ளது.

இந்த முறை தற்போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI Airport) நடைமுறையில் உள்ளது.

இத்திட்டம், ஜிஎம்ஆர் ஏரோ தலைமையிலான டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (DIAL) மூலம், குடிவரவு திணைக்களத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது.

பயணிகளுக்கு புதிய நடைமுறை
இந்தியாவிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும், தங்களின் வருகைக்கு குறைந்தது 72 மணிநேரங்களுக்கு முன்பாக இணையதளத்தின் மூலம் இ-வருகை அட்டையை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

இதில், பயணியின் பெயர், கடவுச்சீட்டு விவரங்கள், வருகை நோக்கம், இந்தியாவில் தங்கும் முகவரி, மற்றும் கடந்த ஆறு நாட்களில் சென்ற நாடுகள் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.

செயல்முறையை எளிதாக்கும் டிஜிட்டல் முயற்சி
புதிய முறை “வெளிநாட்டு பயணிகளுக்கான முழுமையான டிஜிட்டல் அனுபவமாகும்” என டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (DIAL) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிடப்பட்டுள்ளது.

“படிவத்தை சமர்ப்பிக்கவும் – குடிவரவு சோதனையை எளிதில் கடக்கவும்!” என அறிவித்துள்ளது.

மேலும், தங்களது இணையதளத்தில், “இந்த முறை பயணியின் வருகைத் தகவல், பயண நோக்கம் மற்றும் தங்கும் விவரங்களை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்ய உதவுகிறது.

இது ஒரு ‘டிஜிட்டல்-முதன்மை’ முயற்சி ஆகும். இதனால் வரிசைநேரம் குறைகிறது, ஆவணங்கள் நீக்கப்படுகின்றன, மற்றும் வெளிநாட்டு பயணிகளின் அனுபவம் மேம்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.

நேரம் சேமிக்கும் புதிய மாற்றம்
இணையத்தின் வழியாக முன்கூட்டியே தகவலை வழங்குவதால், விமான நிலையத்தில் இறங்கிய பின் காகித படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியம் நீங்குகிறது. இதனால் குடிவரவு கவுன்டர்களில் வரிசை குறைந்து, செயல்முறை வேகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டிஜிட்டல் முயற்சி, இந்தியாவின் விமான நிலையங்களில் “டிஜிட்டல் இந்தியா” முனைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றமாக மதிக்கப்படுகிறது.

• அனைத்து வெளிநாட்டு குடியினரும் இ-வருகை அட்டை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
• வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
• காகிதப் படிவம் இனி பயன்படுத்தப்படாது.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.