இலங்கையைத் தாக்கிய புயல் தித்வா (Cyclone Ditwah) மற்றும் அதனால் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre – DMC) வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையின்படி,
உயிரிழந்தோர் எண்ணிக்கை 618 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 209 பேர் காணாமல் போயுள்ளனர்.
- கண்டி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது – 232 பேர் உயிரிழப்பு, 81 பேர் காணாமல் போனோர்.
- நுவரெலியா மாவட்டம் – 89 இறப்புகள்
- பதுளை மாவட்டம் – 83 இறப்புகள் (இரு மாவட்டங்களிலும் மொத்தம் 63 பேர் காணாமல் போயுள்ளனர்)
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:
- மொத்தம் 20 லட்சத்து 78 ஆயிரத்து 436 பேர் (2,078,436) பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
- முழுமையாக சேதமடைந்த வீடுகள் – 4,071
- பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் – 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் (100,000+)
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

