ஈரானில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள்: 2,403 பேர் உயிரிழப்பு

Must Read

ஈரானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் இதுவரை குறைந்தது 2,403 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புகளில் 18 வயதுக்குக் கீழ் உள்ள 12 சிறுவர்களும் அடங்குவதாக HRANA-வின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கடந்த டிசம்பர் இறுதிக்குப் பின்னர் குறைந்தது 18,137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 1,850 என கூறப்பட்ட நிலையில், புதிய எண்ணிக்கை அதைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானில் தொடரும் இணையத் தொடர்பு முடக்கம் காரணமாக உண்மையான உயிரிழப்புகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.